Skip to main content

Posts

புத்தகக் கண்காட்சிப் படங்கள்

சசிகுமார் விகடன் பதிப்பு பொன்னியின் செல்வன் பக்கத்துல ரொம்ப நேரமா நிண்ணுக்குனு யார் வந்து பக்கத்துல நிண்ணாலும் போட்டோவுக்கு சிரிச்சுக்குனு இருந்தாரு. இந்தக் கடைல பாபா ராம்தேவ் தமிழ்ல பேசினார். மத்த எந்தக் கடைலயும் இப்படி பதாகை வெச்சு தலைப்ப அடையாளம் காட்டலை. சின்ன அறைல வாழ்நாளக் கழிச்ச பத்திரிகையாளர், நெனச்சாலே பிரமிப்பாத்தான் இருக்கு. க்ளாசிக் கலெக்‌ஷன்னு சொல்றாங்க, சல்தாஹை! நல்ல ஏற்பாடு. ஆளுங்கள தேடிப்புடிச்சு உக்கார வெச்சு கலைக்களஞ்சியம் விக்றாங்க. நம்ம பழைய நண்பர் பிரசன்னாவத் தேடுனேன், அவரு அப்ப கடைல இல்லை. செம கேம்பெய்ன். வருஷாவருஷம் நா.முத்துக்குமாரும் ப்ளக்சுல சிரிச்சுர்ராரு. இங்க பெயர்ப் பலகைல ‘ச்’சலை. ஆனா, இங்க சரியா ‘ப்’பிட்டாய்ங்க. பிரிச்சு வெக்றதுக்கெல்லாம் நேரமில்லை. 3300ரூவா, 3400ரூவா, அப்டியே பண்டலோட தூக்கிக்கினு போய்க்கினே இருக்கணும். இந்த ரூட் மேப் ஒரு காப்பி வாங்கி கைல வெச்சாத்தான் ஆச்சுன்னு அடம் புடிச்சு என்னோட பொண்ணு வாங்கினால்ல. மொத ரவுண்ட் பர்சேஸ். பொன்னியின் செல்வனுக்கு மதிப்பு குடுத்து வாங்கியிருக்கேன்.
Recent posts

அரவிந் அடிகாவின் த லாஸ்ட் மேன் இன் டவர் - எனது பார்வையில்

சென்னையில் ஓரளவிற்கு நெரிசலான பகுதியில் இருக்கும் எனது ஒரு படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்பை (1BHK) விற்பது குறித்து மும்பை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘அபி பேச்னேக்கா? தூ பாகல் ஹை க்யா? வெய்ட் கரோ பாபா, கோயி பில்டர் அப்ரோச் கரேகா’ (இப்பொழுதே விற்கவேண்டுமா? உனக்குப் பைத்தியமா? கொஞ்சம் பொறு. யாரேனும் கட்டுமான நிறுவனத்தார் தொடர்புகொள்வார்). இந்த உரையாடல் எங்களிடையே நடந்தபோது நான் த லாஸ்ட் மேன் இன் டவர் படித்திருக்கவில்லை. கதையின் மையக் கரு அதுதான். விஷ்ராம் சொசைட்டி (டவர் ஏ) வாக்கோலா சாட்ண்டா க்ரூஸ் (கிழக்கு) மும்பை-4000055 இன்றைக்கு மிகப் பழைய கட்டடமாக இருக்கும் அதன் மீது மும்பையின் பிரபல கட்டுமான நிறுவனத்தார்களின் பார்வை படுகின்றது. குடியிருப்புகளின் சொந்தக்காரர்களை அவர்கள் அணுகுகின்றார்கள். வீட்டின் மேலிருக்கும் மனச்சாய்வால் அந்தப் பழைய கட்டடத்தில் குடியிருப்பவர்கள் நிறுவனத்தாரின் முன்வைப்பை ஏற்க மறுக்கிறார்கள். நிறுவனத்தார் விடுவதாக இல்லை. ஆடுற மாட்டை ஆடிக்கற பாடுற மாட்டைப் பாடிக் கறவாக ஒவ்வொரு குடியிருப்பின் சொந்தக்காருடைய தேவைகள், குறைபாடுகள் ரகசியமாக ஆராயப்படுகின்றன...

மதிப்பிற்குரிய பீட்டர் ஹெய்னுக்கு... - ஏழாம் அறிவு தொடர்பாக

மதிப்பிற்குரிய பீட்டர் ஹெய்ன்ஜீ, வணக்கம். ஷ்யாம் சுந்தர், மாடக்குளம் அழகிரிசாமி, ஹயாத், ஜூடோ ரத்தினம், மாதவன், சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, கனல் கண்ணன் இவர்களுடைய சண்டைக்காட்சிகளை ரசித்தது போலவே நீங்கள் அமைக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் நான் ரசிகன். இப்பொழுதும் திருமலையில் விஜயின் டாப் ஆங்கிள் சம்மர்சால்ட்டுகளை நினைவில் வைத்து சிலநேரங்களில் அசைபோட்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன். அந்நியனில் டோஜோவுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி, சிவாஜியில் பாடல் காட்சியில் ஸ்டண்ட் கான்செப்ட் இருந்த ’தீ தீ தீ’ எல்லாவற்றுக்கும் ரசிகன். இந்த ரசனையின் வேர் இன்று நேற்று முளைவிட்ட செடியினுடையது அல்ல. நாற்பதாண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர். ரிக்‌ஷாக்காரன் திரைப்படத்தில் சுருள்கத்தி வீசினாரல்லவா, அப்பொழுது முளைவிட்டது. அவருடைய பிரபலமான சண்டைக்காட்சிகள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டன. அந்தப் பாதையில் அவருக்குப் பிறகு வந்த முன்னணிக் கதாநாயகர்களின் சண்டைக்காட்சிகளையும் ரசித்தேன். கமலின் தேவர் மகனாகட்டும் , ரஜினியின் பாட்ஷாவாகட்டும் , விஜயகாந்தின் புலன் விசாரணையாகட்டும் , சண்டைக்காட்சிகள் என்னக் கட்டிப்போட்டுத்...

ஸுபைதா - திரைப்படம் எனது பார்வையில்

ஸுபைதா - கரீஷ்மா மகாராணி (ராஜ்மாதா) - ரேகா மகாராஜா - மனோஜ் பாஜ்பாய் இசை - ஏ.ஆர்.ரகுமான் இயக்கம் - ஷ்யாம் பெனகல் அடிக்கடி நிகழும் சானல் உலாவலில் எப்பொழுதாவது ஈரானியப் படமோ (ஸாங் ஆஃப் த ஸ்பாரோ), பிரெஞ்சுப் படமோ (டிபார்ட்மெண்ட் 36), சீனப் படமோ (ஐ இன் த ஸ்கை), அரபிப் படமோ (பாரடைஸ் நௌ) யூடிவியில் மாட்டிக்கொள்ளும். நேற்று அப்படி மாட்டியது ஒரு இந்திப் படம், ஷ்யாம் பெனகலின் ஸுபைதா . ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்திருந்தும், பாடல்கள் பிரபலமாகியிருந்தும், இந்தத் திரைப்படம் வெற்றியடையாமல் போனது. இது ஏன் தோல்வியடைந்த்து என்னும் கேள்வியுடனே திரைப்படத்தைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கிடைத்த புரிதல் வேறாக இருக்கின்றது. இடைப்பட்ட நாள்களில் மூளைக்குள் சென்ற பல செய்திகள், அனுபவங்கள், சார்பு நிலைகள் எல்லாமாகச் சேர்ந்து படம் பார்க்கும்போதே கேள்விகளையும் துணைக் கேள்விகளையும் அனுமானங்களையும் உண்டாக்குகின்றன. இந்திய விடுதலையின்போது ராஜ்மகராஜ்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசும் அளவிற்கு செல்வாக்கிலிருந்த ஆண்ட்டி ரோஸ் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்குள் எப்படி கீழ்நடு...

வயதாகிவிட்டது!

பரிதியாக வந்த ஆர்யா வெள்ளைக்காரப் பொம்மையின் தலையை உடைப்பது எத்தனையாவது கர்லாக்கட்டை சுற்றில்? எழுபதோ எழுபத்தைந்தோ சரியாக நினைவில் இல்லை, ஆனால், அந்த எண்ணிக்கையை எழுபத்தைந்து என எனது மனம் பதிவுசெய்துகொண்டது. அப்படிப் பதிவு செய்தபோது எனது திறன் முப்பத்தைந்து சுற்றுகள். ஒரே ஒரு 2.5கிலோ கர்லாக்கட்டை இருப்பதால், வலம் முப்பத்தைந்து இடம் முப்பத்தைந்தென சுற்றுகள் முடிக்க ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்களாகும். இரண்டு நிமிடம் ஓய்வு, பிறகு அதே முப்பத்தைந்து முப்பத்தைந்து. பிறகு அடுத்தடுத்த பயிற்சிகள். இப்படி ஒழுங்காக இருந்த பயிற்சியில் திடீரென மாற்றம் வந்ததன் காரணம் பரிதியின் (ஆர்யாவின்) சுற்றுகள் எழுபத்தைந்தென மனதில் பதிந்துபோனதுதான். முப்பத்தைந்தை எழுபத்தைந்தாக்க மனதிற்குள் சவால். இரண்டிரண்டு நாள்களுக்கு ஐந்து சுற்றுகள் வீதம் ஏற்றிக்கொண்டே சென்றேன். அறுபதை எட்டினேன். அறுபதில் நான்கைந்து நாள்கள் கழித்தேன். எந்தச் சுணக்கமும் இல்லாமல் அறுபது சுற்றுகள் முடிப்பது பெரிதாகத் தோன்றவில்லை. தோள் பழக்கப்பட்டுவிட்டது. ஒழுங்காக அதில் ஓரிரு வாரங்கள் தொடர்ந்துவிட்டுப் பின்னர் இலக்கு எண் எழுபத்தைந்தை நோக்கி ஐந்த...

வெங்கட்சாமிநாதனின் புத்தக வெளியீட்டு நிகழ்வு

* பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தில் நுழைவது விமான நிலையத்தில் நுழைவது போலத்தான் இருக்கிறது. * மே மாத ஹெல்த் அன் ஃபிட்னஸில் புஜபலம் காட்டி டீஸல் சிரிக்கிறார். * என்னதான் லினன் க்ளப் ஹஷ் பப்பீஸ் இத்தியாதிகளுடன் நீங்கள் இருந்தாலும், தனிநபராக காரிலிருந்து இறங்கினால், முதலாளியை வாசலில் இறக்கிவிட்டு வண்டியை நிறுத்த வந்திருக்கும் ஓட்டுனராகத்தான் முதல் அபிப்ராயம் விழுகிறது. * தேவநேயப்பாவாணரில் உறுப்பினராவதற்கு இன்னமும் கெஸடட் ஆஃபீசரின் கையெழுத்துதான் கேட்கிறார்கள். * அண்ணாவின் நாடகங்கள் ஏன் குழந்தை இலக்கியங்கள் பகுதியில் இருக்கிறது? * ஒருசிலர் தேவநேயப்பாவாணரில் மின்விசிறிக்குக் கீழுள்ள நாற்காலியில் தூங்குகிறார்கள். நேற்று புத்தகவெளியீட்டு நிகழ்விற்கு சீக்கிரமாகச் சென்றுவிட்டதால், கிடைத்த நேரத்தில் சிறிதுநேரத்தை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும், தேவநேயப்பாவாணர் நூலகத்திலுமாகச் செலவிட்டேன். இருநூறு அடிகள் இடைவெளியில் அருகருகில் இயங்கிவரும் இரண்டு நூலகங்களில் ஒன்று நவீனமயமாகவும் இன்னொன்று அழுக்கடைந்த நிலையிலும் இயங்கிக்கொண்டிருக்கும் வருத்தத்தை எப்போதாவது விரிவாக இங்கே எழுதிவைக்கவேண்டும். சரியாக 5...

சென்னையிலும் ஆடுகளச் சேவல்கள்

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு ஆறரை மணிக்குள்ளாக உயர்நீதிமன்றத்திலிருந்து பொடிநடையாக பிரகாசம் சாலை என்றழைக்கப்படும் பிராட்வேக்குள் நடக்கவேண்டும். ஆற்காடு லூத்ரன், சி.எஸ்.ஐ., வெஸ்லி இங்லிஷ் என ஒவ்வொன்றாக தேவாலயங்களைக் கடந்து சென்றதும் இடப்புறமாக அரசு வணிக வளாகம் விரியும், அதிலிருந்து நான்கைந்து தப்படிகள் நடக்குமுன் வலப்புறம் இனாமல் பெயர்ப் பலகையுடன் பூம்புகார் பதிப்பகம் தெரியும். பதிப்பகத்தைத் தாண்டியவுடன் தொட்டடுத்து வரும் இடப்பக்கம் திரும்பினால் அது அம்மன் கோயில் தெரு - பிராட்வே. அதனுள் நுழைந்ததும் இன்றைய இளங்கதாநாயகர்களின் வெற்றிப்படங்களின் சுவரொட்டிகளுக்கு அருகில், அந்தக் கதாநாயகர்கள் பிறப்பதற்கு முன்பே வெளியான வாத்தியார் திரைப்படச் சுவரொட்டிகள் ஒன்றிரண்டாவது கண்ணில் தெரியும். அப்படி சுவரொட்டிகள் தெரிந்தால்தான் சரியான இடத்திற்குள் நுழைவதாகப் பொருள். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியப்படத் துவங்கலாம். ”அது லவ் பேர்ட்ஸ் சார்” ”கன்னியாஸ்த்ரி வோணும்னா பக்கத்துக் கடைலக்குது பார்” (இந்தப் படம் மட்டும் இங்கிருந்து நன்றிகளுடன் சுட்டது) ”அதுவா, அது ஜேக்கபின். இதுக்கே சொல்றிய, ஒரு சிலது வரும் ப...